HIV தொடர்பிலான விழிப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகம்



HIV வைரஸ் உடலில் உட்புகுவதன் மூலம் எய்ட்ஸ் நோய் ஏற்படுகின்றது.

இந்த நோயை அடையாளம் கண்ட பின்னர் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் தொடர்பில் வைத்தியசாலைக்கு செல்வதில் உளவியல் ரீதியில் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஏய்ட்ஸ் நோயை இரத்தப் பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். நோய்க்கான இரத்தப் பரிசோதனையை நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் மேற்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நோயைக் குணப்படுத்துவதற்காக மருந்து, ஊசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். அனைத்து தகவல்களும் அந்தரங்கமான முறையில் வைக்கப்படும் என்பதனால் அச்சம் இன்றி இந்த பரிசோதனைக்கு முன்வருமாறு அந்த அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மூண்றாம் காலாண்டுப் பகுதியில் இலங்கையில் 3,393 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.