பதினாறு வயதுடைய சிறுமியின் மார்பினை தடாவிய சிறிய தந்தை விளக்கமறியலில் !

(எப்.முபாரக்)
திருகோணமலை சீனகுடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியின் மார்பினை தடாவிய சிறிய தந்தையை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(17) உத்தரவிட்டார்.
தீவரகம்மானை,கொட்பே,சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சிறுமியின் தாயின் இரண்டாவது கணவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாய்க்கு முதல் திருமணத்தின் போது கிடைத்த பதினாறு வயதுடைய சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த வேளை சிறிய தந்தையினால் இவ்வாறு சிறுமியின் மார்பினை தடாவி துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றதாக சிறுமி தாயிடம் தெரிவித்ததையடுத்து சந்தேக நபரின் மனைவி சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.