கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன !

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக அவதானம் நிறைந்த மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, குறித்த மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று (24) காலை தளர்த்திக்கொள்ளப்பட்ட நிலையில் பொருட்களை வாங்குவதற்காக விற்பனை நிலையங்களுக்கு பாரிய அளவில் பொதுமக்கள் திரண்டிருந்தமை வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாட்டுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.