தேர்தல் பின்னடைவுக்கு கல்முனை விவகாரமும் ஒருகாரணம்: கல்முனை நேர்காணலில் த.தே.கூ.பேச்சாளர் சுமந்திரன் எம்.பி.


இருபதாவது திருத்தம் என்பது ஜனநாயகத்திலிருந்து விலகி எதிர்த்திசையில் அதாவது சர்வாதிகாரப்போக்கில் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். அது நாட்டிற்கு நல்லதல்ல. எனவே அதனை நாம் முற்றுமுழுதாக எதிர்க்கிறோம். அதற்காக நீதிமன்றில் ஆஜராகி வாதாடுவேன்.

இவ்வாறு கூறுகிறார் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன்.

திரு சுமந்திரன் நேற்றுமுன்தினம் கல்முனைக்கு விஜயம்செய்தபோது கல்முனைநெற் இணையத்தள ஏற்பாட்டில் நேர்காணலை மேற்கொள்ளமுடிந்தது. அந் நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துக்களை இங்கு வாசகர்களுக்காகத் தருகிறோம்.

கல்முனையில் இடம்பெற்ற வடக்குபிரதேச செயலக உண்ணாவிரதத்தை நிறைவுசெய்துவைக்கவந்தபின்னர் கல்முனைக்கு அவர் விஜயம் செய்தது இதுவே முதல்தடைவ என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அவருடனான நேர்காணல் இதோ?

வினா: இன்று நாட்டில் புதிய அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்பின் 20வது திருத்தம் பேசுபொருளாகவுள்ளது. அதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்? அதில் திருத்தம் செய்யப்படவேண்டுமா? அல்லது முற்றாக எதிர்க்கிறீர்களா?

விடை: அதனை நாம் முற்றாகவே எதிர்க்கிறோம். சர்வாதிகாரப்போக்கிற்கு வித்திடும் அந்த இருபதில் உள்ள அனைத்து விடயங்களையும் எதிர்க்கிறோம்.

வினா: தங்கள் கட்சி சார்பாக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருக்கிறீர்கள்.அதில் நீங்கள் ஆஜராகுவீர்களா?

விடை: ஜந்துபேர் கொண்ட நீதியரசர் குழாத்தின் முன்னிலையில் 29ஆம் திகதி முதல் 20 விவகாரம் தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. பல நாட்கள் செல்லலாம். ஆனால் 3வாரங்களுள் உச்சநீதிமன்றம் இதற்கான தீர்வை பாராளுமன்றிற்கு அறிவிக்கவேண்டும். எமது கட்சி சார்பில் தலைவர் சம்பந்தர் ஜயா மனுத்தாக்கல் செய்துள்ளார். நான் ஆஜராகி வாதிடுவேன்.

வினா: அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் கடந்த காலங்களில் இன்னல்கள் அநீதிகள் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது தமிழ்மக்கள் த.தே.கூட்டமைப்புமீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாக்களித்து பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பிவந்தும் கூட்டமைப்பு இம்மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கவில்லையென்ற குற்றச்சாட்டுள்ளது. அதன் பிரதிபலிப்பாக கடந்த பொதுத்தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டலாம். கட்சிக்கேற்பட்ட அந்த பின்னடைவை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

விடை: த.தே.கூட்டமைப்பிற்கு அம்பாறையில் மட்டுமல்ல வடகிழக்கு எட்டுமாவட்டங்களிலும் பின்னடைவு ஏற்பட்டது. த.தே.கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பதை விட நம்பிக்கை குறைந்துள்ளது என்று கொள்ளலாம். பின்னடைவுக்கு பல காரணங்களுள்ளன. பின்னடைவில் பாரிய பின்னடைவு என்பது அம்பாறை மாவட்டத்திலே தான் ஏற்பட்டது என்பதை ஏற்கிறேன்.

இலங்கையில் 1931ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சர்வசன வாக்குரிமை முறையிலான தேர்தலின்படி அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் எந்தவொரு தமிழ்க்கட்சிக்கும் தரப்பிற்கும் இல்லாமல்போன முதல் தடவை கடந்ததேர்தலில் தான். அப்பின்னடவை நாம் பொறுப்பு ஏற்கிறோம். மக்களுடைய எதிர்பார்ப்பு எம்மூலமாக நிறைவேற்றப்படவில்லை என்பது அதற்கான பிரதான காரணமாயிருக்கலாம். கடந்த 5 வருடகாலத்தில் அரசாங்கத்தின் பங்குதாரராக இல்லாவிட்டாலும் ஆதரவாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் எமது மக்களுடைய பிரச்சினைகளை தேவைகளை குறைந்தபட்சம் தீர்த்திருக்கலாம் என்பது நியாயமான ஆதங்கம் எதிர்பார்ப்பு. அதில் தவறில்லை.உண்மையாக பலவிடயங்களை தீர்த்துவைத்தும் எதனையும் முழுமையாக தீர்த்துவைக்கமுடியவில்லை என்பதை ஏற்றாக வேண்டும். ஆகவே மக்கள் மத்தியிலுள்ள ஏமாற்றம் விரக்தி வெறுப்பு என்பது நியாயமானது. இதுவே பின்னடைவுக்கு முக்கிய காரணம்.

வினா: நல்லாட்சி அரசாங்க உருவாக்கத்தில் முக்கியபங்கு வகித்த தங்கள் கட்சியும் தாங்களும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பிரமதர் ரணில் ஆகியோருக்கு பக்கபலமாக இருந்தீர்கள். புலதடவகள் ஆட்சியை தக்கவைக்கவும் பிரதான பாகமெடுத்தீர்கள். ஆனால் தமிழ்மக்களது தேவைகயை பிரச்சினைகளை களைய அல்லது தீர்த்துவைக்க தவறியுள்ளீர்கள் எனற்குற்றசாட்டுமுள்ளது. அதைவிட அம்பாறை மாவட்ட தமிழர்களின் முக்கிய பிரச்சினையான கல்முனை வடக்குபிரதசசெயலக தரமுயர்த்தலில் போதிய அக்கறை காட்டவில்லயைன்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? கடந்ததேர்தலின்போது அம்பாறை மாவட்டதோல்விக்கு அதுவோர் காரணமென்பதை ஏற்கிறீர்களா?

விடை: அம்பாறை மாவட்டதோல்விக்கு முக்கியகாரணிகளில் ஒன்று கல்முனை விவகாரம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதைத்தான் முதலில்சொன்னேன் சிலவிடயங்களை முழுமையாக செய்துமுடிக்கவில்லையென்று. 2017இல் உள்ளுராட்சி அமைச்சராக கருஜயசூரிய இருக்கும்போது நானும் மாவையும் கல்முனை விவகாரம் தொடர்பாக பேசினோம். பின்பு வந்த தேர்தலில் வஜிர அமைச்சரானார். அவருடனும் பேசினாம்.அப்போது நாம் அரசாங்கத்தின் பங்குதாரரர் இல்லாவிட்டாலும் ஆதரவாக செயற்பட்டதனால் இது முடியுமன்று மக்களும் நினைத்தார்கள். நாமும் நினைத்தோம். ஆனால் அன்று ஸ்ரீல.சு.கட்சி 43உறுப்பினர்களின் ஆதரவு இருந்தபடியால் எமது ஆதரவு என்பது பேரளவில் இருந்ததே தவிர அதிமுக்கியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு பட்ஜெட்டில் 160பேர் ஆதரவளித்தோம்.அதாவது எம்மில் பெரிதாக அவர்கள் தங்கியிருக்கவில்லை. ஆனால் சு.கட்சி ஆதரவு விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் 2018 அக்டோபர் 20க்குப்பிறகு ஜ.தே.கட்சி மாத்திரம் ஆட்சியமைக்க எமது ஆதரவு முக்கியமாக தேவைப்பட்டது. 2018 2019 களில் நம்பிக்கையில்லா பிரேரணைகளில் நாம் பூரணமாக ஆதவளித்தாம். அப்போது கல்முனை தரமுயர்த்தல் விவகாரம் எமது கோரிக்கைளில் ஒன்றாக பரிணமித்தது. அவர்களும் செய்வதாக வாக்குறுதியளித்தார்கள்.கணக்காளரை அனுப்புவதாகக்கூட சொன்னார்கள்.

அவர்களது வாக்கெடுப்பிற்கு எமது வாக்குகள் தேவைப்பட்டது. அதற்கு நாமும் ஆதரவளித்தோம். அதேபோல முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவும் அளிக்கப்பட்டது.அவர்களில் சிலர் அமைச்சரவையிலும் இருந்தார்கள். எனவே எமது ஆதரவு எப்படி இருந்ததோ அவர்களது ஆதரவும் அப்படி இருந்தது. சிலர் கல்முனை தரமுயர்த்தலை எதிர்த்தார்கள். அவர்களது அழுத்தம் கூடுதலாகவிருந்தது. அதுவும் அது இழுபடக்காரணமெனலாம்.

வினா: தமிழ்மக்களது உரிமைகள் அபிலாசைகள் எனவரும்போது இவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் சுயநலப்போக்காடு முட்டுக்கட்டையாக அல்லது எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர்.கிழக்கு தமிழர்விடயத்தில் அவர்கள் அநீதி இழைத்தேவந்துள்ளனர் என்பதும் வெளிப்படை. எனினும் முஸ்லிமக்ளுக்கு இன்னல்வரும்பாது தங்கள் கட்சியும் தாங்களும் உரத்துக்குரல் கொடுத்ததோடு சட்டரீதியிலும் உதவிவந்துள்ளீர்கள். கல்முனை வடக்கு பிரதசசெயலக விவகாரம் தமிழ்மக்களின் பலதசாப்தகால நியாயமான அபிலாசை தேவை என்பதை உணர்ந்தும் அவர்கள் தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே இருந்துவந்துள்ளார்கள் என்பது வெளிப்படை. இந்நிலையில் அவர்களுடனான இணக்க அரசியல் அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பதெல்லாம் சாத்தியப்படுமா அதற்கு உத்தரவாதம் அளிப்பார்களா?

விடை: எந்த உத்தரவாதமும் கிடையாது. அவர்கள் சுயநலப்போக்கோடு எமக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்கிறேன். அதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்கமுடியாது. அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாம் தீமை செய்யவேண்டுமென்பதில்லை. நாம் இனஜக்கியம் நாட்டின் சமாதானம்கருதி சரியானவற்றையே செய்துவருகிறோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களின் நியாயமான அபிலாசைகளுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் அநீதி இழைக்கின்றார்கள் என்பதற்காக அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றபோது நாம் குரல்கொடுக்கமுடியாமல் இருக்கமுடியாது. அவர்களுக்காக முஸ்லிம்சமுகத்தை புறக்கணிக்கமுடியாது. எந்தசமுகத்திற்கும் அநீதி இழைக்கப்படுமN;பாது நாம் மௌனமாக வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.

வினா:முந்திய தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்திற்கு தேசியபட்டியல் ஆசனமொன்றைத்தருவதாக கூறியிருந்தும் அது தரப்படவில்லை.இம்முறைகூட பலத்த இழுபறிக்குமத்தியில்தான் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு தங்களின் பங்களிப்பும் இருந்ததாக அறியவருகிறது. அம்பாறை என்றால் ஏனிந்த அலட்சியப்போக்கு கட்சியில் காண்பிக்கப்படுகிறது?

விடை: துரதிஸ்டவசமாக அம்பாறை இம்முறை தமிழ்ஆசனத்ழைத இழந்தது. அதற்கு மாற்றீடாக தேசியப்பட்டியல் ஆசனத்தை இங்கு வழங்கவேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடும் எம்போன்றவர்களின் நிலைப்பாடும்.கட்சியின் அரசியல்குழு மத்தியசெயற்குழு போன்றாரின் தீர்மானமும் அம்பாறைக்கு வழங்கவேண்டுமன்பதே. அதன்படி நடந்தது.

வினா: புதிய அரசாங்கத்தோடு அபிவிருத்தி விடயத்தில் இணைந்து செயற்படுவீர்களா? அமைச்சர் தினேஸ்குணவர்த்தனா அழைத்திருப்பதாக தெரிகிறது. அப்படி பேச்சுவார்த்தைக்கு போவீர்களா? அரசுடன் இணைந்து செயற்படுவீர்களா?

விடை: பேச்சுவார்த்தைக்கென எந்த அழைப்பும் அரச தரப்பிலிருந்து இதுவரை வரவில்லை. நான் புதிய யாப்புருவாக்கம் தொடர்பில் பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் இருதடவைகள் பேசியுள்ளேன். அவர்கள் புதிய யாப்பு பற்றியும் அபிவிருத்தி பற்றியும் பேசினார்களே தவிர தமிழ் மக்களின் அரசியல் தீர்வு பற்றி வாய்திறக்கவில்லை. இறுதியாக பாராளுமன்றிற்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோதுகூட நான் பேசினேன். அபிவிருத்திக்காக சேர்ந்து வேலைசெய்யுமாறு கேட்டுக்கொண்டார். அபிவிருத்திக்கு நாம் முட்டுக்கட்டை அல்ல. நாம் இணைந்து வேலைசெய்யத்தயார் என்று கூறினேன்.

அவரது கருத்தில் வேறெந்தவிடயமும் பேசவேண்டாமென்பதுபோலிருந்தது.

ஊண்மையில் அபிவிருத்தி என்ற வியடத்தில் சேர்ந்து வேலை செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சபனையுமில்லை. ஆனால் எமது மக்கள் எமக்கு அபிவிருத்திக்காக மட்டும் ஆணைதரவில்லை. மாறாக அரசியல் தீர்வுக்காகவும் ஆணை தந்துள்ளனர். எனவே அபிவிருத்திக்கு ஆதரவு நல்கும் அதேவேளை தமிழ்அரசியல்தீர்வுக்காக அழுத்தம் கொடுப்போம்

வினா: வடக்கு கிழக்கில் தமிழ்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்படுவது குறிப்பாக தேர்தலில் ஒன்றாக பயணிப்பது குறித்து கருத்துக்கள் சமகாலத்தில் வருகின்றன. கிழக்கு மாகாணசபைத்தேர்தலிலும் இணைந்து சேர்ந்தியங்குவது போட்டியிடுவது தொடர்பில் சிலஅமைப்புகள் முயற்சியெடுத்துவருகின்றன. இந்தநிலையில் தங்கள் கட்சி ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடமுன்வருமா?

விடை: வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கும் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் மக்கள்மத்தியில் சம செல்வாக்குடன் திகழ்கின்றனவா,? என்பது ஒருபுறம்.

வடக்கில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏனைய கட்சிகள் சில ஓரளவு செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் வன்னியில் அவ்வாறான நிலை இல்லை.

எமது கட்சியைத் தவிர ஏனையகட்சிகள் வன்னி மற்றும் கிழக்கில் பேசக்கூடிய அளவில் செல்வாக்கு அற்ற கட்சிகளாகவேயுள்ளன. அவர்களுக்கு போதுமான செல்வாக்கு கிடையாது. எனவே அவர்களுடன் சேர்ந்து போட்டியிடுவதன்மூலம் பெரியதொரு மாற்றத்தை காணலாம் என்றுகூறமுடியாது.

வினா: கல்முனையில் இந்தநேர்காணல் இடம்பெறுவதால் இறுதியாக கல்முனை பற்றி வினவலாம். கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் விடயத்தில் தற்போதைய நிலைப்பாடு எவ்வாறு உள்ளது?

விடை: எமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது. நாம் தொடர்ந்து முயற்சிப்போம். ஆனால் ஒரு விடயத்தையும் கூறவேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தால் தரமுயர்த்தலை செய்துதருவோம் என்று வாக்குறுதியளித்தவர்கள் இன்று அரசாங்கத்தாடு ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது பதவிகளிலும் உள்ளனர். அவாக்ளால் இதனை ஏன் செய்யமுடியாது? அவர்கள் ஆட்சியின் பங்குதாரர்கள். பங்காளிகள். நாம் எதிர்க்கட்சியினர். எனவே பகிரங்கமாக அவர்கள் மேடைகளில் விடுத்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்