ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த கருணா அம்மானுக்கு கிடைத்த மஹிந்தவின் தற்காலிக இணைப்பாளர் பதவி


கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13)  பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் ,   வாக்குகள் சிதறடிக்கப்படாமையால் அம்பாறையில்   தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு    வழமையாக கிடைத்த தமிழ் பாராளமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது .  கருணா அம்மானிற்கு தேசிய பட்டியல் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் மஹிந்த தரப்பால் வழங்கப்படவில்லை . 

அம்பாறைக்கு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியலை அம்பாறைக்கு வழங்கினர். 

கடைசியில் கருணா அம்மானிற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருந்தது .