கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் , வாக்குகள் சிதறடிக்கப்படாமையால் அம்பாறையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வழமையாக கிடைத்த தமிழ் பாராளமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது . கருணா அம்மானிற்கு தேசிய பட்டியல் கிடைக்கும் என எதிர்பார்த்த போதும் மஹிந்த தரப்பால் வழங்கப்படவில்லை .
அம்பாறைக்கு தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனதையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியலை அம்பாறைக்கு வழங்கினர்.
கடைசியில் கருணா அம்மானிற்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருந்தது .