அரசின் வர்ததமானி அறிவிப்பைத் தொடர்ந்து முகக்கவசம் அணிவதில் கிழக்கு மக்கள் பெரும் ஆர்வம்


(ரீ.எல்.ஜவ்பர்கான்)
சுகாதார அமைச்சின் புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானதையடுத்து முகக்கவசம் அணிவதிலும் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதிலும் கிழக்கு மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை சகல தரப்பு மக்களும் முகக்கவசம் அணிந்து வெளியில் நடமாடியதையும் பஸ்தரிப்பு நிலையம், பொதுச் சந்தைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் சுகாதார நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டதையும் காணமுடிந்தது.

குறுகிய மற்றும் நீண்டதூர பஸ்களில் சமுக இடைவெளி முழுமையாக பேணப்பட்டே பயணிகள் பயணத்தில் ஈடுபட்டனர்.

அரசாங்கத்தின் அறிவித்தலை இம்மாவட்ட மக்கள் அனைவரும் பூரணமாக கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.




செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்