சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி!

யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று(16) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை, நாவலடி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது, வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.