சந்திரகாந்தன் எம்.பி ( பிள்ளையான் ) குழுவினரால் கொலை அச்சுறுத்தல் ! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!


 நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் முகநூல் குழுவினர் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமது தொழிற்சங்கத்திற்கு தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதுடன் முகநூல் ஊடாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போராட்டம் நடாத்துபவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துவரும் நிலையில் தமது சங்கத்தின் மீதான அச்சுறுத்தலுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர என்ன பதில் வழங்கப்போகின்றார் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.