மட்டக்களப்பில் கடை உடைத்து தங்க ஆபரணம் மற்றும் பணம் கொள்ளை!


மட்டக்களப்பு சின்ன ஊறணி பிரதா ன வீதியிலுள்ள பலசரக்கு கடை யுடன் இணை ந்த நகை க்கடை யில் பின்பகுதி கதவை உடை த்து அங்கிருந்த 5 அரை பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் 85 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கடை யில் ஒருபகுதியில் பலசரகு வியாபா ரமும் ஒருபகுதியில் நகை ஈடுபிடிக்கும் கடை வியாபாரம் இடம் பெற்றுவந்த நிலையில் ஊரடங்கு சட்டம் காரணமா க மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று காலையில் கடையின் முதலாளி கடைக்கு செ ன்ற நிலையில் கடையின் பின்பகுதி கதவு பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளனர்.

அங்கு பொருத்தப்பட்ட சிசிரி கமராவில் பதிவாகியுள்ளதுடன் குறித்த கொள்ளையன் முகத்தை மறை த்தபடி சூட்சகமாக கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசா ரணையில் தெரியவந்துள்ளது சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடவியல் பிரிவு தீவிர விசாரணையினை மேற்கொ ண்டுவருகின்றனர்.

இது தொ டர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசா ர் மேற்கொண்டு வருகின்றனர்.