பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி!



கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

ஒக்டோபர் முதல் வாரத்தில் இதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்க மத்திய குழு உறுப்பினர் நளின்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய ஆவணம் எதிர்வரும் 17 ஆம் திகதி கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.