மட்டக்களப்பு பார் வீதியில் விபத்து; சாரதி தப்பியோட்டம்!


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

இன்று காலை (08.10.2021) மட்டக்களப்பு பார் வீதியில் ஒரு சிறியரக காருடன் கனரக லொறி மோதி விட்டு சாரதி தப்பி சென்றுள்ளார். அந்த கனரக லொறியினையும் சாரதியினையும் பொலிசார் தேடிவருகின்றனர்.

விபத்து இடம் பெற்ற இடத்தில் இருந்து தப்பிச்சென்ற சாரதியையும் லொறியையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரின் முன்பக்கம் பலத்த சேதத்திற்கு உள்ளான நிலையில் காணப்பட்டது.