சாமிக்க கருணாரத்னவுக்கு ஒரு வருட தடை போட்டித்தடை !



இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றுவதற்கு ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட தடையை விதித்துள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட் அவருக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமும் விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது வீரர்கள் ஒப்பந்தத்தில் பல விதிகளை மீறியமை தொடர்பில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவினால் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, சாமிக்க கருணாரத்ன தமக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.