மட்டக்களப்பு காந்தி பூங்கா பகுதியிலுள்ள வாவியில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு ! அடையாளம் காண உதவுமாறு பொலிசார் கோரிக்கை!!

(சரவணன்)

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்க்கு அருகிலுள்ள வாவியில் பெண் ஒருவர் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் பெண் ஒருவர் சடலமாக நீரில் மிதப்பதை கண்டு பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன் சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.