இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒன்பதும் பெப்ரவரி மாதத்தில் எட்டும் மார்ச் மாதத்தில் 16 முறைப்பாடுகளுமாக மொத்தம் 33 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த வருடம் முழுவதும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 154 முறைப்பாடுகளே கிடைத்துள்ளன.இதனுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் முதல் மூன்று மாதத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன.
இந்நிலையை இல்லாதொழிக்க பொதுமக்கள் சமூகத்தலைவர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள்,மதஸ்தலங்கள் போன்றவை ஒன்றிணைந்து பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.