ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவரும், ஜப்பான் கராத்தே சங்கத்தின் (துமுயு) தொழில்நுட்ப இயக்குனருமான சிகான் சுசுகே ஒட்டானி அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது இலங்கை ராம் கராத்தே சங்க அங்கத்தவர்களுக்கான விசேட பயிற்சி ஒன்றை அளித்திருந்தார்.
ஜப்பான் கராட்டிச் சங்கத்தின் இலங்கைக்கான தலைவரும் பிரதம போதனாசிரியருமான டி.எல்.லலித்தின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த அவர், அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய மண்டபத்திலும், தருமசங்கரி மைதான உள்ளக விளையாட்டரங்கிலும் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பயிற்சியை வழங்கினார்.
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெறவுள்ள தெற்காசிய கராட்டி சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை காராட்டி சம்மேளன அங்கத்தவர்களுக்கான பயிற்சியை வழங்கும் நோக்கோடு கடந்த மாதம் இலங்கை வநதிருந்;த அவர், மட்டக்களப்பில் சென்சி க.குககுமாரராஜா, சென்சி க.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
நிறைவாக ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதானாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தி தலைமையில் சங்கத்தின் சிரேஸ்ட போதானாசிரியர்களின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற பயிற்சிச் செயலமர்வில் கலந்து கொண்டு 250 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காராட்டி தொழில்நுட்பங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தினை வழங்கினார்.