பங்களாதேஷ் கடற்படைத் தளபதி இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ் கடற்படைத் தளபதி அத்மிரால் எம் ஷஹீன் இக்பால் அவர்கள் ஜனவரி 19 ஆம் திகதி பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை ஶ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார். 

 வருகை தந்த பங்களாதேஷ் கடற்படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின் போது, இரு நாட்டு பிரதானிகளும் தற்போதைய கடல்சார் பிரச்சினைகள், இரு நாடுகளுக்குமிடையிலான பொதுவான விடயங்கள், உலக அளவிலாள மாற்றங்கள், கடற்படையின் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.

 கலந்துரையாடலின் இறுதியில் பங்களாதேஷ் கடற்படை தளபதிக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் விஷேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.