![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiERGiCGkUU4RIJLss-uGiK7TVngktjbv-eiIxL1EQiNqG_FLP0qn3dnPfpCPBPdoihmoxIPBxI_apQ4NhwFlrexeFEIX8Dkn9Cv73_rFwXsE9h95qwW0eqG-AERemx2KA5TuZ6LRuTTszMbhiQ-sRrZyLoeqFF1bFjzJL6dEIPCi7CxduuNG5FLSUF2rQ/s16000/WhatsApp%20Image%202023-12-01%20at%2010.57.13.jpeg)
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவத்தில் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை சட்டவைத்தியரிடம் உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.