உயர்தர மாணவர்களுக்கான தொழில் பயிற்சி திட்டங்கள் ஆரம்பம்!


உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழிற்பயிற்சியை மார்ச் 5ஆம் திகதி முதல் இலவசமாகக் கற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இவ்வருட சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கும் இது போன்ற பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து ஆசிரியர்களும் தகவல் தொழிநுட்ப அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர், ஒவ்வொரு பிரதேசத்திலும் நிறுவப்பட்டுள்ள கணினி வள நிலையங்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் பாரிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள கணினி வள நிலையங்களின் எண்ணிக்கை 100 எனவும், எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.