எரிபொருள் விற்பனை சடுதியாக அதிகரிப்பு !


கடந்த சில வாரங்களில் எரிபொருள் விற்பனை குறைந்துள்ளதாகவும், ஆனால் வெசாக் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாகவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சில நாட்களாக எரிபொருள் பாவனை அதிகரித்து வருவதால், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் வழமையை விட அதிகமான எரிபொருள் இருப்புக்களை ஓடர் செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் எரிபொருள் விற்பனை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சிங்கள, தமிழ் புத்தாண்டு தினங்களில் மட்டும் ஓரளவு விற்பனை நடந்ததாக சொல்கிறார்கள்.

அத்துடன், வெசாக் நிறைவடைந்ததன் பின்னர் எரிபொருள் விற்பனை முன்பு போலவே குறையும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.