மீண்டும் விசாரணைக்கு வரும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் !


இலங்கை கடற்சூழலுக்கு பாரிய மாசடைவை ஏற்படுத்திய X-Press Pearl கப்பல் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் இந்த அனர்த்தம் இடம்பெற்றது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். X-Press Pearl கப்பல் விபத்தினால் இலங்கை கடல் சூழல் மற்றும் சமுத்திரத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்ப்பட்டிருந்தது.

இதனால் மீனவ சமூகத்தின் ஒரு பகுதியினரும் பாதிப்பை எதிர்கொண்டனர். விபத்தினால் இலங்கை முகம்கொடுத்த பல்வேறு வகையிலான இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து புதிதாக விசாரணைகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன் X-Press Pearl கப்பல் விபத்துடன் தொடர்புடையதாக இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பிலும் விசாரிக்கப்படும்.