புத்தாண்டு தினத்தன்று கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இவர் தென்னை மரத்தில் ஏறியபோது, தென்னையில் கட்டப்பட்டிருந்த தேங்காய் மட்டை கழன்று விழுந்தமையால் நிலை தடுமாறி மரத்திலிருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.