பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 1,900 போதை மாத்திரைகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்டப்டுள்ளன.
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.