பெரியவட்டுவான் இராணுவ முகாமில் குருதியை கொடையாய் வழங்கி வைப்பு

 பெரியவட்டுவான் இராணுவ முகாமில் இரத்த தான நிகழ்வு 09.06.2025 ஆம் திகதி இடம்பெற்றது.

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் பாரிய குருதி பற்றாக்குறையை போக்கும் வகையில் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து அபயம் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு குருதியை கொடையாக வழங்கி வைத்தனர். காலை 09மணி தொடக்கம் 03மணி வரை இடம்பெற்றது.