20 வருடங்களாக மருத்துவராக ஏமாற்றி வந்த நபர் கைது!


சுமார் இரண்டு தசாப்தங்களாக மருத்துவராக ஏமாற்றி வந்ததாகக் கூறப்படும் 54 வயது நபர் நேற்று மாலை (21) எகொட உயனவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாத்துவை, தெல்துவை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர், ஸ்ரீ தலருக்காராம விஹாரைக்கு அருகில் சஹன சேவா என்ற மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளார்.

வேறொருவருக்கு சொந்தமான இலங்கை மருத்துவ சபை பதிவு இலக்கத்தை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளில் அந்த நிலையத்தில் உரிமம் பெறாத மருந்துகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.