
(சித்தா)
கல்வி, உயர்கல்வி, மற்றும் தொழில்கல்வி அமைச்சினால் அபே கம, பத்தரமுல்ல எனும் இடத்தில் 25.09.2025 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மட்ட பாடசாலை மாணவர்களுக்கான Robotic and Invention Competition -2025 இல் தரம் - 7 ஐச் சேர்ந்த செல்வி. திலகராஜா தினன்யா அவர்கள் Invention-Entertainment பிரிவில் Female Award இனை பெற்றுச் தேசிய மட்டச் சாதனை புரிந்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான Robotic and Invention Competition -2025 ஆனது கடந்த July மாதம் வலய மட்டத்தில் இடம்பெற்றது.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி பாடசாலையை சேர்ந்த 10 மாணவர்களின் படைப்புகள் முன்வைக்கப்பட்டிருந்த போதும் நான்கு மாணவர்கள் மாகாணமட்ட போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.
தொடர்ந்து இடம் பெற்ற மாகாணமட்ட போட்டியில் 3 மாணவர்கள் Merit Award பெற்றிருந்ததோடு, தரம் - 7 ஐச் சேர்ந்த செல்வி. திலகராஜா தினன்யா அவர்கள் Invention-Entertainment பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.












