'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்பாட்டு திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
  
 
  
 
  
 
  













