மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது - மஹிந்த ராஜபக்ஷ
நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட மக்களின் அன்பு இலாப நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது பேஸ்புக் பக்கத்தில் அவர் வௌியிட்டுள்ள பதிவில், தமது வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களிடையே கழித்ததால், மக்களின் அன்பை நன்கு அறிந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதன் காரணமாக, அதன் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மேலும் அதிகமாகி உள்ளதாகவும், இது ஒரு அரசியல் உறவு மட்டுமல்ல, கடினமான ஒரு இதயப்பூர்வமான பிணைப்பு என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
எனவே, அவற்றை உடைக்கும் முயற்சிகள் மூலம் இன்னும் அதிகமான பிணைப்புகளை வலுப்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, மக்களுடன் செலவிடும் இந்த நேரம் முழுவதும் ஒரு தலைவராக தான் பெறக்கூடிய மிகப்பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பதாகக் கூறியுள்ளார்.