மனைவி கத்தியால் குத்தியதில் கணவன் காயம்




மனைவி தனது கணவரை கத்தியால் குத்தி காயமடைந்த நிலையில் கணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (6) மஹியங்களைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

மஹியங்கனை, சொரபொரவெவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இது நடந்துள்ளது. கணவனை, மனைவி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த கணவன் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி எனத் தெரியவருகிறது.காயமடைந்தவர் மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்தப்பட்ட நபர், கிராதுருகோட்ட பிரிவு துணை சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் பணியாற்றும் 43 வயதுடைய பாதுகாப்பு அதிகாரி என்றும், மஹியங்கனை, சொரபொரவெவ, மீகஹபிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின்களின் தாயான 42 வயதுடைய பெண் ஒருலர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு அதிகரித்ததை அடுத்து, மனைவி தனது கணவரை கத்தியால் குத்தியதாக தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.