கிண்ணியாவில் 36 கைக்குண்டுகள் மீட்பு




திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் நேற்று (04) 36 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
மாவிலாறு குளம் உடைப்பெடுத்ததை அடுத்து கிண்ணியா பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கி, தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வரும் நிலையில், அந்த பகுதியை சுத்தம் செய்யும் போதே கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவு வரவழைக்கப்பட்டு அங்கு கைவிடப்பட்டிருந்த 36 கைக்குண்டுகளை மீட்டதுடன் நீதிமன்ற உத்தரவை பெற்று அவற்றை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசர் தெரிவித்தனர்.