மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் போக்குவரத்து முழுமையாக துண்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்துகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் கித்துள், உறுகாமம்குளங்களின் வான்கதவுகள் திறந்துள்ளதனாலும் மாதுறுஓயா போன்ற இடங்களிலிருந்துவரும் வெள்ள நீர் காரணமாகவும் மட்டக்களப்பு கிரான் பகுதியில் ஆற்றுவெள்ளம் அதிகரித்துள்ளது.