மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; 4 வெளிநாட்டவர்கள் கைது !


வெள்ளவத்தை பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியை சோதனைக்குட்படுத்திய போது நான்கு வெளிநாட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (05) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 34, 36 மற்றும் 38 வயதுடைய தாய்லாந்து நாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.