வேலையற்ற சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களினால் ஏற்பாடு செய்யப்பட தொற்றுநோய் தொடர்பான நேரடியான வழிகாட்டல் முகாம்



வேலையற்ற சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களினால் தொற்றுநோய் தொடர்பாக நேரடியான வழிகாட்டல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. 

பசறை யூரி எனும் இடத்தில் 3 முகாம்கள் பார்வையிடப்பட்டன
ஒவ்வொரு முகாமிலும் அண்ணளவாக 500 பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். 

நேற்று முன்தினம் (டிசம்பர் 5) பதுளை மாவட்டத்தில், பசறையில் யூரி எனும் இடத்திலுள்ள மூன்று முகாம்களில் இருக்கும் மக்களைப் பார்வையிட்டு அவர்களுக்கான மருத்துவ சேவையினை வழங்கியிருந்தனர்.

நேற்று ஒவ்வொரு முகாமிலும் அண்ணளவாக 500 பொதுமக்களைப் பார்வையிட்ட சித்த, ஆயுர்வேத, யுனானி வைத்தியர்கள் ஏறக்குறைய 1500 பேருக்கான மருத்துவ சேவைகளை வழங்கியிருந்தனர்.

 நேற்று (டிசம்பர் 6) அவர்கள் பூண்டுலோயாவில் இலவச மருத்துவ முகாம்களூடாக தமது சேவையினைத் தொடர்கின்ற அதேவேளை, தன்னார்வமாக தமது சங்கத்தினூடாக ஏனைய மாவட்டங்களிலும் இவ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலவச மருத்துவமுகாம்களை முன்னெடுத்து வருகின்றமை மிகவும் பாராட்டத்தக்கதாகும்.