சுண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் – பொலிஸார்

 


காணாமல் போன ஐந்து கடற்படை அதிகாரிகள் சுண்டிக்குளம் பகுதியில் உள்ள குளம் கழிமுகத்தை அகலப்படுத்தும் நடவடிக்கையின் போது, ஐந்து கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் காணாமல் போயுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிக்க கடற்படை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த வேளையிலேயே காணாமல் போன 5 கடற்படை வீரர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரோடையை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த துயரச்சம்பவம் ஏற்பட்டது. இது தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்வருகின்றமை குறிப்பிடத்தக்கது.