வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 குண்டுகள் மீட்பு



அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் உள்ள முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகளை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது குறித்த முன்னாள் கொமாண்டோ படைவீரரும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்காக, அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவற்றை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.