உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்பு


உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
வழமையாக ஒரு கிலோ 300 தொடக்கம் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது இஞ்சி ஒரு கிலோ 1500 தொடக்கம் 2000 ரூபாய் வரையான அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

டித்வா புயலினால் இஞ்சிச் செய்கைகள் அழிவடைந்ததன் காரணமாக, இந்நாட்களில் உள்ளூர் சந்தையில் பச்சை இஞ்சிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.