பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற குழுக்கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாகாணசபைத் தேர்தலை நடத்தவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில், ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்கும் குழுவுக்கு ஆளும் தரப்பில் இருந்து இன்னும் பெயர் பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கல்களுக்கு விரைவில் தீர்வுக் காணப்படும்.அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சகல தரப்பினருடன் கலந்துரையாடி முரண்பாடற்ற தீர்வினை எடுக்க வேண்டும்.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது.தித்வா புயல் தாக்கத்தின் பின்னர் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்துக்குள் மாகாணசபை தேர்தலையும் உள்ளடக்குங்கள். அப்போது பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


.jpg)










.webp)