பஹ்ரைன் தலைநகருக்கு அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் சுமார் 32 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி இந்த தகவல் வௌியாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் அனைவரும் பஹ்ரைன் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 17 வயது சிறுமி ஒருவரின் தலை மற்றும் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காயமடைந்தவர்களில் இரண்டு மாதக் குழந்தை ஒன்றும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.













