தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 வைத்திய பட்டதாரிகளுக்கு, ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளாக நியமனம் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025.07.04 ஆம் திகதியுடன் பயிற்சியை முடித்த 453 வைத்திய பட்டதாரிகள் இந்த ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளாக நியமனம் வழங்குவதற்கு தகுதியுடையவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2026.04.04 நண்பகல் 12.00 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியாகும்.குறித்த காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.
குறித்த திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காத விண்ணப்பதாரிகள் தொடர்பாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என அந்த அமைச்சின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




.webp)








