நாட்டின் பல பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை (16) பிற்பகல் முதல் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்று நண்பகல் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இரவு 11 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 1 மணிக்குப் பின்னர், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்கள் உட்பட பல இடங்களிலும், காலி, மாத்தறை, குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் இதனால் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.










.jpg)


