மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு வருகிறது முதலாவது மசகு எண்ணெய்க் கப்பல்



மத்திய கிழக்கு மோதல் நிலையில் இலங்கைக்கு வருகை தரும் முதல் மசகு எண்ணெய்க் கப்பல் நாளை (17) நாட்டை வந்தடையவுள்ளது என இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம் அறிவித்துள்ளது.

அந்தக் கப்பல் 97,500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு வருவதாக பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள் மேலும் ஒரு கப்பல் நாட்டுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், "அமெரிக்காவிலிருந்து வரவுள்ள WTI கப்பலொன்றில் தற்போது எண்ணெய் ஏற்றப்பட்டு வருகிறது. அது இன்று இலங்கையை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.