-Picsart-AiImageEnhancer.jpeg)
2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு (I.G.S. Prematilleke) உயர்நீதிமன்றம் 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் இன்று (14) தீர்ப்பளித்தது.
சிறைத்தண்டனையுடன் மேலதிகமாக 3 மில்லியன் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் ஒரு ஆண்டு சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பானது நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன உள்ளிட்ட மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கின் போது உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காகவே முன்னாள் பணிப்பாளர் பிரேமதிலக்கவிற்கு எதிராக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






.jpg)



.jpeg)
.jpg)
.jpg)