யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி!


 யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் இன்றையதினம் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவர் மீது மின்னல் தாக்கியது.

இந்நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.