எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு


இன்று அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பானது நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விலை திருத்தத்தின் பிரகாரம், எரிபொருள் வகைகளின் விலை அதிகரிப்பு விபரங்கள் பின்வருமாறு:

* ஒக்டேன் 95 பெற்றோல்: ஒரு லீட்டர் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* ஒக்டேன் 92 பெற்றோல்: ஒரு லீட்டர் 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* சூப்பர் டீசல்: ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* மண்ணெண்ணெய்:ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* சாதாரண டீசல்: ஒரு லீட்டர் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.