பெண்ணைக் கொலை செய்துவிட்டு ஆண் உயிர்மாய்ப்பு



வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிக்கதலுபொத்த பகுதியில், நேற்று சனிக்கிழமை (30) கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அதேவீட்டில் மற்றுமொரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த ஆண் 40 வயதுடையவர் எனவும், உயிரிழந்த பெண் 49 வயதுடையவர் எனவும், அவர்கள் நிக்கதலுபொத்த பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி பெண்ணை கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வெல்லவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.