களுவாஞ்சிக்குடி பொது சந்தையில் வெற்றிலை மென்று உமிழ்ந்தவருக்கு ரூ.1500 அபராதம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொது சந்தையில் பொது இடத்தில் வெற்றிலை மென்று உமிழ்ந்த நபர் ஒருவருக்கு எதிராக களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

1883ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க தண்டனைகள் சட்டக்கோவையின் கீழ் பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனால் இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது வழக்கு தொடுக்கப்பட்ட நபருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் 1500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.