20 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனேடியர் கைது


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ.201.89 மில்லியன் பெறுமதியான 20.117 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருளுடன் 27 வயதுடைய கனேடியப் பிரஜை ஒருவர் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் டொரொன்டோவில் இருந்து தோஹா ஊடாக கத்தார் ஏர்வேஸ் QR662 விமானத்தில் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் வந்தடைந்த சந்தேகநபரின் இரண்டு பயணப்பைகள் சோதனையிடப்பட்டபோது, 80 பழுப்பு நிற கட்டிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்ப விசாரணைகளுக்குப் பின்னர், சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.