கனடாவில் அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் துப்பாக்கிச் சூடு



கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், தூதரகக் கட்டிடத்தின் முன்பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இந்த இடத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும்.

இதனையடுத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.