முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து பேருக்கு பிணை



சீன பிரஜை ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உட்பட ஐந்து சந்தேகநபர்களுக்கும் கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரையும் தலா 500,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

சீன பிரஜை ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சரின் மகன் மற்றும் ஏனைய நான்கு சந்தேகநபர்களும் கடந்த ஜூலை 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.