அதன்படி, குறித்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.




.jpg)
.jpg)

.jpg)

.jpg)
.jpg)


