நந்தா மாலினியின் மறைவு: மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு



பிரபல பாடகி நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு, எதிர்வரும் ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அறிவிக்க பொதுநிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

நந்தா மாலினியின் மறைவு இலங்கையின் கலைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த மூன்று தினங்களும் தேசிய துக்க தினங்களாக அனுஷ்டிக்கப்படவுள்ளன